Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டி 20 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 2-2 என சமநிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்திய அணி சூர்ய குமாரின் அபாரமான ஆட்டத்தால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தது.
இந்நிலையில் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT