Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
கேரளாவில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் பென்ஷன், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பென்ஷன், முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கும் உதவித்தொகையை ரூ.2,500ஆக உயர்த்துதல், மீனவர்களுக்கு சிறப்பு உதவி, ரூ.5 ஆயிரம் கோடியில் கடலோர மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள், ரப்பர் அடிப்படை விலையை உயர்த்துதல், வீடு இல்லாதோருக்கு 1.5 லட்சம் வீடுகள் உள்ளிட்ட அம்சங்கள் நேற்று எல்டிஎஃப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT