Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
கோவை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், `தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களைப் பாதுகாக்க, அவற்றை பக்தர்களிடமே ஒப்படைத்து, நிர்வாகம் செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகள் ஜி.கே.வாசன், பக்தி சார்ந்த கலாச்சார வாழ்வு வாழும் தமிழ் மக்களிடம் கோயில்களை ஒப்படைப்பேன் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளீர்கள். கோயில் மாநிலமான தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். கோயில்களைப் பாதுகாக்க, அவற்றை அரசிடமிருந்து விடுவித்து, பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT