Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

அரக்கோணம் தடத்தில் - 4 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் :

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் நடப்பதால், நாளை (மார்ச் 21)சில விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் - திருத்தணி காலை 6.15 மணி ரயில் அரக்கோணம் வரையிலும், திருத்தணி - சென்னை சென்டரல் காலை 8.45 மணி ரயில் திருத்தணி வரையிலும் இயக்கப்படும். இதேபோல், சென்னை சென்ட்ரல் - திருத்தணி காலை 9 மணி ரயில் அரக்கோணம் வரையிலும், திருத்தணி - சென்னை சென்ட்ரல் காலை 11.40 மணி ரயில் திருத்தணி வரையிலும் இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x