Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் விளாசலில் - 185 ரன்கள் குவித்தது இந்திய அணி :

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது அதிரடியால் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இஷான் கிஷன், யுவேந்திர சாஹல் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ராகுல் ஷாகர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 12 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்திலும், கே.எல்.ராகுல் 14 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். தனதுமுதல் அரை சதத்தை விளாசியசூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் சேம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சேம் கரண் ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார் சூர்யகுமார் யாதவ்.

கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் ரஷீத் பந்திலும், ரிஷப் பந்த் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்திலும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களில் மார்க்வுட் பந்திலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னில் நடையை கட்டினார். ஷர்துல் தாக்குர் 4 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து 186 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. ஜாஸ் பட்லர் 9 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 33, டேவிட் மலான் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x