Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM
தென் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வளிமண்டலத்தில் நிலவும்காற்று சுழற்சி காரணமாக 20-ம்தேதி தென் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசான மழையும், 21, 22 தேதிகளில் ஓரிரு இடங்களில்இடியுடன் கூடிய லேசான மழையும்பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்டவானிலையே நிலவும்.
18-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 101 டிகிரி, கரூர் பரமத்தியில்101 டிகிரி, தருமபுரி, பாளையங்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் தலா 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT