Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

மனைவி கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் :

திருப்பூர்: திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அன்இத்குமார்சிங் (26) நேற்று அளித்த புகார் மனு: நான், மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, சமூகவலைதளம் மூலம் பாட்னாவைச் சேர்ந்த தீபாகுமாரி (22) என்பவருக்கும், எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் வீட்டைவிட்டு இருவரும் வெளியேறி, திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து திருப்பூருக்கு வந்தோம். வாடகைக்கு வீடு கிடைக்கும்வரை, எனது மனைவியை திருப்பூர் பங்களா நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கவைத்திருந்தேன். நான் முருங்கபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். கடந்த 16-ம் தேதி எனது மனைவியை, 4 பேர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது மனைவியை மீட்டு, என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x