Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க சரத்குமார் வலியுறுத்தல் :

சென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வேட்புமனு தாக்கல் வரும் 19-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் சிரமங்கள் உள்ளன.

ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டு்ம். எனவே, மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலைக் கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x