Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM
அன்னியச் செலாவணி கையிருப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 4-வதுஇடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. திடீரென டாலர் வெளியேற்றத்தை சமாளிப்பதற் காக அன்னியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி கணிசமாக அதிகரித்து வந்துள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடமும் உள்ள அன்னியச் செலாவணி ரொக்கக் கையிருப்பு ஒரே அளவில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ரஷ்ய கரன்சி ரூபிளின் மதிப்பு சரிந்ததால் அந்நாட்டின் அன்னியச் செலா வணி கையிருப்பு மதிப்பும் சரிந்தது.
மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி இந்தியா வசம் உள்ள அன்னியச் செலாவணி ரொக்கக் கையிருப்பு 58,300 கோடி டாலராகும். ரஷ்யாவிடம் உள்ள கையிருப்பு 58,010 கோடி டாலராகும்.
சீனாவிடம் அதிக அளவு கையிருப்பு உள்ளதால் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் ஜப்பானும், மூன்றாமிடத்தில் ஸ்விட்சர் லாந்தும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT