Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

ஒரே நாளில் வேட்பாளர் ஆனவர் - பாஜக நிர்வாகிகளிடம் ஆதரவு கோரிய சரவணன் :

பாஜக மாநில பொதுச் செயலர் னிவாசன், மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய டாக்டர் சரவணன்.

மதுரை

திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து ஒரேநாளில் மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளர் ஆன டாக்டர் சரவணன், பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா. சரவணன் நேற்று முன்தினம் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன் னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இதையடுத்து அன்றைய தினமே வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வடக்குத் தொகுதியில் மாநில பொதுச் செயலர் னிவாசன் போட்டியிடுவதாக இருந்தது. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து னிவாசன் ஆதரவாளர்கள் புதூர் பாஜக தேர்தல் அலுவலகத்தைப் பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் நேற்று மதுரை திரும்பிய சரவணன், பாஜக அரசு தொடர்பு பிரிவுச் செயலர் ராஜரத்தினத்துடன் பாஜக நிர் வாகிகளின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து ஆதரவு கோரினார்.

பாஜக மாநிலப் பொதுச் செயலர் னிவாசன், மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள், பாஜக மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகளை அவர் சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x