Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

மேலூர் அருகே சட்ட மாணவரை தாக்கியவர் கைது :

மதுரை மாவட்டம், மேலூர் கிடாரிபட்டி அருகிலுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் பாரதி ஜெயசிம்மன் (20).

இவர் சிவகங்கை அருகிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்.

கடந்த 13-ம் தேதி அழகாபுரியில் நடந்த கோயில் விழாவில், பாரதி ஜெயசிம்மனின் உறவினரை அதே ஊரைச் சேர்ந்த சின்னக்கருப்பு (49) என்பவர் தகாத வார்த்தையால் திட்டினார்.

பாரதி ஜெயசிம்மன் தட்டிக் கேட்டபோது, சாதியைக் கூறி அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர் பாரதி ஜெயசிம்மன் கொடுத்த புகாரின்பேரில் சின்னக்கருப்புவை மேலவளவு போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x