Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM
கோவை: கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரில் செல்வராஜ் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர், கடையைப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றார். நேற்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பணம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல, ஒலம்பஸ் அருகேயுள்ள போலீஸ் கந்தசாமி வீதியில் சத்தி ராஜா என்பவரது பலசரக்கு கடையின் பூட்டையும் உடைத்து, சிகரெட், பேப்பர், பால் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT