Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த - வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் 7 ஆண்டுக்கு பின் நாடு திரும்பினர் :

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர், அகர்தலாவில் 7 ஆண்டு மனநல சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.

வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கடந்த 2014-ல் தற்செயலாக எல்லையை கடந்து இந்தியப் பகுதியான திரிபுராவுக்கு வந்தபோது பாதுகாப்பு படை யினரால் பிடிக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அகர்தலாவில் உள்ள அரசின் மாடர்ன் மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதில் குணமடைந்த இருவரும் நேற்று முன்தினம் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.

இவர்களை வங்கதேசம் அழைத்துக் கொள்வதில் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதர் முகம்மது ஜபேயத் ஹோசன் முக்கியப் பங்காற்றினார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, “இவர்கள் வங்கதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்குமார் மஜும்தார், பிரஹமின்பாரி மாவட்டத்தை சேர்ந்த சயேஸ்திரா பேகம் என அடையாளம் காணப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த இருவரும் குணமடைந்து தங்கள் குடும்பத்துடன் இணைந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. வங்கதேசத்தை சேர்ந்த மேலும் 22 பேர் இங்கு மருத்துவ சிகிச்சை பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 12 பேர் குணமடைந்து விட்டனர். அவர்கள் வங்கதேசத்தினரா என சரிபார்த்து வருகிறோம். விரைவில் அவர்களும் தங்கள் குடும்பத்துடன் இணைவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே வங்கதேசம் திரும்பிய இருவரின் குடும் பத்தினரும் இந்திய அதிகாரி களிடம் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x