Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி இல்லை.எனவே தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 17-ம் தேதி வரைவறண்ட வானிலையே நிலவும்.
13-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் சேலத்தில் 100 டிகிரி,பாளையங்கோட்டை, மதுரைஆகிய இடங்களில் தலா 98 டிகிரிவெப்பம் பதிவானது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT