Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

மாநிலத் திட்டக்குழு வேண்டும் :

தமிழ்நாட்டுக்கென்று மாநிலக் கல்வித் திட்டம் வகுக்க வேண்டுமென்ற பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. கருணாநிதி முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, நாட்டிலேயே முதன்முதலாக மாநிலத் திட்டக்குழு அமைக்கப்பட்டது. அதில் கல்விசார் உறுப்பினராக இருந்த மால்கம் ஆதிசேஷையா தமிழ்நாட்டுக்கென்று கல்விக் கொள்கையை உருவாக்கினார். அம்முயற்சியில் பங்கேற்கும் வாய்ப்பை நான் பெற்றேன். ஆனால், அக்கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, இந்திய அளவிலான திட்டக்குழுவும் கலைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, முன்பு உருவாக்கியதுபோல் மாநிலத் திட்டக்குழு உருவாக்குவது அவசியம்.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x