Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
மகாராஷ்டிராவில் விவசாயி களிடமிருந்து விளைபொருட்களை வாங்கிக் கொண்டு ரூ.2 கோடி மோசடி செய்த வர்த்தகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உஸ்மானாபாத் மாவட்டம் தேவ்லாலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, சிவாஜி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கடந்த 2018-19-ல் ஒரு வர்த்தகரிடம் 133 குவின்ட்டால் சோயாபீன் விற்பனை செய்தேன். இதற்காக, ரூ.5.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். ஆனால் அந்த காசோலை பணமின்றி திரும்பியது. அதற்கு அந்த வர்த்தகர் உரிய பதில் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே 43 விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கிக் கொண்டு, அதற்கான ரூ.2.17 கோடி பணத்தை தரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அந்த வர்த்தகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி), 406 (நம்பிக்கை துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT