Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

எல்லையில் பாகிஸ்தான் சதி - சுரங்கம் தோண்டி ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி :

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டது. ஆனாலும், காஷ்மீர் எல்லைக்கு அருகே பல்வேறு தீவிரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, பிர் பாஞ்சல் மலைத்தொடரின் தென் பகுதியில் 6 பயிற்சி முகாம்கள் உள்ளன. இதில் மரலா தீவிரவாத முகாமில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு, சுரங்கங்களை தோண்டியும் நீர்வழிகளை பயன்படுத்தியும் இந்தியாவுக்குள் ஊடுருவுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமானி என்ற இடத்தில் உள்ள முகாமில், காஷ்மீரில் செயல்பட்டு வரும் அல் பதார் தீவிரவாத அமைப்பினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பர்னாலா என்ற இடத்தில் அல் பதார் அமைப்பின் மற்றொரு முகாம் செயல்பட்டு வருகிறது.

காஷ்மீரின் சம்பா மாவட்டத் தில் சர்வதேச எல்லை அருகே 300 மீட்டர் சுரங்கம் தோண்டப் பட்டிருந்ததை பிஎஸ்எப் வீரர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கண்டுபிடித்தனர். இதே மாவட்டத்தில் 150 மீட்டர் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x