Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

உள் மாவட்டங்களில் வெப்பம் உயரும் :

திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி வரை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘குமரிக்கடல், மாலத்தீவு முதல் வட கடலோர கேரளா வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 9-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தென் மாவட் டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x