Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

ஆவடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது :

ஆவடி அருகே வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேர்கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன் (32). இவர், கடந்த 4-ம் தேதி மாலை பணி நிமித்தமாக ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் -சக்தி நகர் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, மொபைல் போன், பணம் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, திருமுல்லைவாயில் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, திருமுல்லைவாயில்- சக்தி நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களை போலீஸார் பிடித்து, விசாரணை செய்தனர்.

அவ்விசாரணையில், சென்னை- முகலிவாக்கம், குன்றத்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஜெயக்குமார் (30), பாலகிருஷ்ணன் (22) ஆகிய இருவர், குன்றத்தூர் அருகே உள்ள கோவூர் குமரன் நகரைச் ஜெயலட்சுமி(33), பிரியா(22) ஆகியோரின் உதவியுடன், மோகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, பிரியா ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து மோகனின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x