Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் ஐந்து ரதம், கடற்கரை கோயில், மகிஷாசுர மர்த்தினி மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கலைச் சின்ன வளாகங்களுக்குள் செல்ல தொல்லியல் துறை கட்டணம் வசூலிக்கிறது. இதில், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் தலா ஒரு நபருக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டினரிடம் தலா ஒரு நபருக்கு ரூ.650 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான நேற்று கலைச் சின்ன வளாகங்களுக்குள் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியுடன் கலைச் சின்னங்களை கண்டு ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT