Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

வெடிவிபத்தில் : உயிரிழப்பு 25 ஆக உயர்வு :

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவரது பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக் காயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், வெடி விபத்தில் பலத்த தீக்காய மடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த அந்தோணி(40) நேற்று இறந்தார்.

அதையடுத்து, இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x