Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

பெண் கொலையில் இருவர் கைது :

மானாமதுரை

மானாமதுரை அருகே கிளங்காட்டூரைச் சேர்ந்தவர் வளர்மதி (22). இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் மணிச்சியேந்தலைச் சேர்ந்த சத்தியேந்தி ரனுக்கும் (28) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள் நிவேதா (6), மகன் ஆகாஷ் (3) உள்ளனர். சத்தியேந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது வளர்மதிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சத்தியேந்திரன் ஊருக்குத் திரும்பிய நிலையில், வளர்மதியும், வேல்ராஜூம் திருச்சியில் வசித்தனர்.

இதையடுத்து சத்தியேந்திரன், உற வினர்கள் தனசேகரன், காட்டுராஜா உள் ளிட்டோர் திருச்சி சென்று, வேல்ராஜை தாக்கிவிட்டு வளர்மதியை அழைத்து வந்து அவரது தாயார் வீட்டில் விட்டனர். இதில் படுகாயமடைந்த வேல்ராஜ் உயிரிழந்தார்.

இந்நிலையில், வளர்மதியின் வீட்டுக்குச் சென்ற தனசேகரன், காட்டுராஜா ஆகியோர் ‘உன்னால்தான் கொலை வழக்குப் பதிவானது’ என்று கூறி தகராறு செய்து வளர்மதி, அவரது தாயார் மீனாள் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் வளர்மதி உயிரிழந்தார். மானா மதுரை போலீஸார் தனசேகரன், காட்டு ராஜாவைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x