Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

2019-ம் ஆண்டில் 61 சதவீத வீடுகள், 26 சதவீத உணவு விடுதிகளில் இந்தியர்கள் விரயம் செய்த உணவு 6.80 கோடி டன்: ஐநா ஆய்வு அறிக்கையில் தகவல்

இந்தியர்கள் 2019-ம் ஆண்டில் 6.80 கோடி டன் அளவில் உணவுகளை விரயம் செய்திருப்பதாக ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

‘உணவு விரயக் குறியீடு 2021’ என்று உணவு விரயம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. உலக ளாவிய அளவில் 2019-ம் ஆண்டு 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61 சதவீதம் வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு விடுதிகளிலிருந்தும், 13 சதவீதம் சில்லறை விற்பனையின் மூலமும் விரயம் ஆகியிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய வீடுகளில் 2019-ம் ஆண்டு 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை விரயம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தனி நபர் ஆண்டுக்கு 59 கிலோ உணவையும், சீனாவில் தனி நபர் ஆண்டுக்கு 64 கிலோ உணவையும் விரயம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் தயாரிக்கப்படும் உணவில் 17 சதவீதம் விரயம் ஆக்கப்படுகிறது.

பசுமை குடில் வாயு வெளியேற்றத் துக்கு உணவு விரயம் முக்கிய காரண மாக இருக்கிறது என்றும் உணவு விரயத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப் புத் தெரிவித்துள்ளது. உணவு விரயம் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுநாள் வரையில் வளர்ந்த நாடுகளில்தான் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுவதாக நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐநாவின் இந்த ஆய்வறிக்கை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுகிறது என்பதைக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x