Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM
தமிழகத்தில் வரும் 15-ம் தேதிமுதல் 6 குறுகிய தூர பயணிகள்ரயில்கள் (டெமு) மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில்கள் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாவட்டங்கள், நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட முன்பதிவு இல்லாத குறுகிய தூர பயணிகள் ரயில்களை (டெமு, மெமு) மீண்டும்இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் (06009/ 06010), விருத்தாசலம் - சேலம் (06121/06122), திருச்சி - கரூர்(06123), திருச்சி - காரைக்குடி (06125) ஆகிய ரயில்கள் 15-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT