Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

பெரும்புதூர் தொகுதியில் நேரடியாக களம் காண திமுக நிர்வாகிகள் விருப்பம் :

பெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அக்கட்சியினர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக ஒரே கூட்டணியில் உள்ளன. பெரும்புதூர் தொகுதியில் கடந்த தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக, கம்யூ. கட்சிகள் இருந்தாலும் கடந்த தேர்தல் வாக்குகளைப் பார்க்கும்போது, திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது.

கடந்த 2016 தேர்தலில் கூட்டணி வேட்பாளர் என்பதால் திமுகவினர் முழு உற்சாகத்துடன் பணியாற்றவில்லை. எனவே, இத்தொகுதியை இம்முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக நேரடியாக களம் கண்டால் மட்டுமே அதிமுகவை சமாளித்து வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தலைமையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தற்போது உள்ள எம்எல்ஏ கே.பழனி தொகுதிக்கு எதிர்பார்த்த அளவு எந்த முக்கிய திட்டங்கள் மக்கள் நலப்பபணிகளையும் செய்யவில்லை. இதனால் திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது என்கின்றனர் தொகுதி திமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x