Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

காங்கிரஸ் நேர்காணல் :

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சுமார் 3 ஆயிரத்து 500 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் சத்யமூர்த்திபவனில் 5 பிரிவாக நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, செல்லகுமார், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுக்களாக நேர்காணல் செய்தனர்.

சு.திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடுவதற்காக நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள், வழக்கமாக கேட்கப்படும் தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும், மக்கள் செல்வாக்கு எவ்வாறு உள்ளது, பேரிடர் காலத்தில் அங்கு மேற்கொண்ட நிவாரண உதவிகள், மக்கள் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குரிய பதிலை எஸ்.டி.ராமச்சந்திரன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x