Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

அதிமுக கூட்டணியை விட்டு : வெளியேறினார் கருணாஸ் :

2016தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ். இந்த 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக தரப்பில் கருணாஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் அதிமுகவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் என்று அறிவித்த அரசாணையை அமல்படுத்தி, முக்குலேத்தோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றேன். மத்திய, மாநில அரகள் என் கோரிக்கைகளை தொடர்ந்து புறந்தள்ளி வந்தனர். முக்ககுலத்தோர் சமுதாயத்துக்கு எதிராக வன்னியர் மற்றும் தான் சார்ந்த சமுதாயத்தையும் கையில் எடுத்து செயல்படுகிறார் முதல்வர். எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து விடுவித்துக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x