Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
அதிமுக – தமாகா தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து தமாகா தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்டுப் பெற்று தனிச்சின்னத்தில் போட்டியிட தமாகா விரும்பியது. அதிமுகவுடன் தமாகா தொகுதிப் பங்கீடு குறித்து ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 12 தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கும்படி தமாகா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 3 அல்லது 4 தொகுதிகள் வரை தர முடியும் என்று அதிமுக தரப்பு தெரிவித்தது. இப்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுக – தமாகா இடையே விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுற்று தொகுதி பங்கீட்டு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT