Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராக திமுக துரோகம் செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தது. ராகுல் காந்தி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மத்திய அரசைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதன்மூலம் தேர்தல் விதிமுறைகளை அவர் மீறியுள்ளார்.
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
எங்களை மிரட்டியதாக சிலர் கூறுகின்றனர். யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஒதுங்கி இருக்கிறார். நான் ஒதுங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. மக்களாக நிராகரிக்கும் வரை ஒரு அரசியல்வாதி அரசியலில் இருப்பார். தானாக ஓய்வு பெற்றால்தான் உண்டு.
- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT