Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

கள்ளச்சாராயத்தால் 19 பேர் உயிரிழப்பு : பிஹாரில் 9 பேருக்கு மரண தண்டனை :

பாட்னா: பிஹாரில் கடந்த 2015-ம் ஆண்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது. கோபால்கஞ்ச் மாவட்டம் கஜுர்பானி கிராமத்தில் 2016 ஆகஸ்ட் 16-ம் தேதி ஒரு கும்பல் சாராய விற்பனையில் ஈடுபட்டது. இந்த சாராயத்தை குடித்த 19 பேர் உயிரிழந்தனர். 6 பேருக்கு பார்வை பறிபோனது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கானது கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 13 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி கடந்த மாதம் அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்போது, குற்றவாளிகளில் 9 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x