Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் :

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், இசை போன்றவை) பணியாற்றி வருகின்றனர். முன்பு அவர்களுக்குமாதம் ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் இருந்து தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த பிப்ரவரி 4 முதல் 12 வரைசென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கூடுதல்முதன்மை கல்வி அதிகாரிகள்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x