Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் இணையவழியில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில், மார்ச் மாதத்துக்கான ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் இணையவழியில் வரும் 10-ம் தேதி காலை 11 மணி முதல், மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்), பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் என்ற அடிப்படையில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன், பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன் வரும் 8-ம் தேதிக்கு முன்னதாக, அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இணையவழியில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைப்பு, மின்னஞ்சல் மூலமாக அளிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT