Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

ஜிப்மரில் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :

ஜிப்மரில் சான்றிதழ் படிப்புக்குவரும் 15-ம் தேதிக்குள் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கல்விப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ஜிப்மரில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், தகுதி வாய்ந்த சவக்கிடங்கு உதவியாளர், குடல் வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு முறைஆகிய சான்றிதழ் படிப்புக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. இப்பாடப்பிரிவில் பயிலும் ஓராண்டு காலத்துக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் மேலும் ஓராண்டு காலம் ஜிப்மர் அவசர சிகிச்சை மையத்தில் மாதம் உதவித்தொகையுடன் (ரூ.3,713) கூடிய பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஜிப்மர் இணையதளம் (www.jipmer.edu.in) மற்றும் ஜிப்மர் கல்விப் பிரிவு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 15-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஜிப்மர் கல்விப் பிரிவு முதல்வர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். நேர்க்காணல் வரும் 19-ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஜிப்மர் அகாடமிக் சென்டர் 3-வது மாடியில் உள்ள தேர்வு அறை 3-ல் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்பாடப்பிரிவில் பயிலும் ஓராண்டு காலத்துக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x