Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

மதுரையில் திமுக ஆலோசனை கூட்டம் :

திருச்சியில் நாளை (மார்ச் 7) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், மதுரையில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தெற்கு மாவட்டச் செய லாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி பேசுகையில், ‘‘தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே உள்ளன. தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யார் நின்றாலும் அனைவரும் சிறப் பாகச் செயல்பட வேண்டும். திருச்சியில் நாளை நடக்கும் திமுக மாநாட்டில் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொள்ள வேண் டும்.

புறநகர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x