Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது :

வேலூர்: பேரணாம்பட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவலின்பேரில் பறக்கும் படை அலுவலர் கோட்டீஸ்வரன் மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேரணாம்பட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் இருந்து சரக்கு வாகனத்தில் 3 பேர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அதிகாரிகளைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். காவல் துறையினர் விரட்டிச் சென்று மூன்று பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்சல் என்ற அப்சல் பாஷா (32), சமீர் அஹ்மது (20), அபுபக்கர் (32) ஆகியோர் என தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியுடன் ஒரு சரக்கு வாகனம், ஒரு காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வேலூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x