Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

தபால் வாக்களிக்கும் 6,331 ராணுவ வீரர்கள் :

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 6,331 ராணுவ வீரர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 6,331 ராணுவ வீரர்கள் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர்கள், தபால் வாக்குகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்களின் பட்டியலுடன் அவர்களின் செல்போன் எண், பணிபுரியும் படைப்பிரிவின் விவரம், அவர்கள் வாக்களிக்க உள்ள சட்டப்பேரவை தொகுதி விவரம் உள்ளிட்டவற்றை சேகரித்துள்ளனர்.

தேர்தலில் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் இவர்களுக்கான தபால் வாக்குகள் மின்னணு முறையில் ராணுவ வீரர்கள் பணிபுரியும் படைப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ராணுவ வீரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் க்யூ-ஆர் கோடு மூலம் தபால் வாக்குகளை பதிவிறக்கம் செய்து வேட்பாளருக்கு வாக்களித்த பிறகு அவற்றை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x