Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

சேத்துப்பட்டில் சூதாடியதாக : 13 பேர் கைது :

சேத்துப்பட்டில் விடுதியில் சூதாடிய 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, விடுதியில் உள்ளஅறையில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேத்துப்பட்டு பழம்பேட்டை, லூர்து நகர் மற்றும் பூங்குணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜெயகுமார், ஏழுமலை, பிரபு, சீனுவாசன், அஜிஸ், வெற்றி, ஜெகதீஷ், பாலாஜி, அகஸ்டின், தினேஷ்குமார், பிரவின், சம்சுதீன், துரைசாமி ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x