Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (மார்ச் 6) நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சி தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால், ஒற்றை இலக்க தொகுதிகள் வரையே திமுக தரப்பு ஒதுக்க விரும்புவதால் பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளது. இதில் திமுகவுடனான தொகுதி பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘இணக்கமாக முடிக்க வேண்டிய தொகுதி பங்கீட்டை திமுகதான் சிக்கலாக்கி வருகிறது. நீண்டகாலமாக தோழமையாக உடன் பயணிக்கும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதும் எதிரணிக்கு சாதமாகிவிடும். இதுகுறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT