Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு சிவசேனா ஆதரவு :

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடப்போவதில்லை என்றும், மம்தாவுக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெறச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, இடதுசாரி காங்கிரஸ் என மும்முனை போட்டி கடுமையாக உள்ளது. இந்தக் கடும ்போட்டியில் சிவசேனா கட்சியும் போட்டியிடுவதற்குப் பதிலாக எல்லோரும் ஒன்றுகூடி எதிர்க்கும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருக்கிறது என்று சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

இந்த முடிவு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி நீண்ட காலமாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்துவந்த நிலையில் 2019-ல் கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ், என்சிபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. அதன்பிறகு தொடர்ந்து பாஜகவுடன் முரண்பட்டு வருகிறது. தற்போது மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக உள்ள நிலையில், சிவசேனா கட்சி மம்தாவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x