Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு - அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை : மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தகவல்

கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று அரசுமருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் இணைச் செயலாளர் (நிதித்துறை) வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கல்யாணராமன், கரோனா நோய்த் தடுப்பு பணியின்போது, தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டுஜூலை 20-ம் தேதி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கப்படு வதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துவிட்டு, இப்போது ரூ.25 லட்சம் மட்டும் தருவது நியாயமா. கரோனாவுக்கு எதிரான போரில் முழுமூச்சோடு பணியாற்றி, உயிரையே தியாகம் செய்யும் மருத்துவருக்கு தரும் மரியாதை இதுதானா?

அரசு மருத்துவர்கள் உயிரோடுஇருக்கும்போதும் தகுதிக்கேற்றஊதியத்தை தர மறுக்கிறார்கள்.மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் களத்தில் நின்று போராடி உயிரிழக்கும்போதும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கரோனாவால் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் தரப்படவில்லை. அவரது மனைவிக்கு அரசு வேலையும்இன்னும் வழங்கவில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியம் போன்றவை இதுவரை செயல்படுத்தப்படாதது வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால், தங்கள் அடிப்படை உரிமைகளை காக்க மருத்துவர்கள் மீண்டும்களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x