Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை :

மேட்டுப்பாளையம் மாதையன் லேஅவுட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவருக்குத் திருமணமாகி, குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2015 -ம் ஆண்டு அக்டோபர் மாதம், 16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு (போக்ஸோ) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், விஜயகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ராதிகா, குற்றம்சுமத்தப்பட்ட விஜயகுமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x