Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மண்டலஅலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் சி.கீதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் ராமலிங்கம், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, ‘‘உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டு மொத்தம் 380 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 அல்லது 9 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர், ஓர் உதவி மண்டல அலுவலர், ஓர் உதவியாளர் நியமிக்கப்படுவர். அதன் அடிப்படையில் உடுமலை தொகுதிக்கு தலா 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், யாருக்கு எந்த மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. அந்தந்த மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடியை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்ற விவரத்தை ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT