Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
உடுமலையில் நடைபெற்ற அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் என்.ரவிக்குமார் தலைமை வகித்தார்.
காவல் ஆய்வாளர்கள் புகழேந்தி, ஓம்பிரகாஷ், ராஜா கண்ணன், அன்னம் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர். இதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முன் கூட்டியே பிரச்சாரத்துக்கு உரிய அனுமதி பெறுவது, ஊர்வலம் மற்றும் இதர நிகழ்ச்சிகளின்போது சட்ட விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது, பிற தலைவர்களின் உருவ பொம்மையை எடுத்துச் செல்லக்கூடாது.
மத, இன, சாதி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக் கூடாது. வழிபாட்டுத் தலங்களின் முன் பிரச்சாரம் செய்யக்கூடாது. வெறுப்பு மற்றும் பதற்றம் உருவாக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT