Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
புதுச்சேரி பாஜக அலுவல கத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநில பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் பொதுமக்கள் குற்றச்சாட்டு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வுக்கு தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம், செல்வகணபதி நியமன எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான், இளங்கோ உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் குற்றச்சாட்டு குழுவுக்கு தலை வராக மாநில பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம் உள்பட 11 பேர் உள்ளனர்.
‘உங்கள் விருப்பம், எங்கள் வாக்குறுதி' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை தயாரித்து வருகி றோம். அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு சிறந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். பொதுமக்களிடம் கருத்துகேட்க மார்ச் 5 (இன்று) முதல்3 நாட்களுக்கு வேனில் பெட்டிஅமைத்து அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்ல உள் ளோம். அதேபோல் காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டு குழுவில் அரசு செய்த ஊழல், முறைகேடு, தவறுகளை பட்டியலிட உள்ளோம். மேலும், காங்கிரஸ் கட்சியானது தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் உள்ளதையும் வெளியிடுவோம்.
கூட்டணி தொடர்பாக அதிகாரப் பூர்வமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஓரிரு நாளில் கூட்டணி குறித்த தெளிவும், தொகுதி பங்கீடும் வெளியாகிவிடும். ரங்கசாமி தன்னை முதல்வராக அறிவித்தால் தான் கூட்டணிக்கு வருவேன் என வலியுறுத்தவில்லை. அதேபோல் இக்கூட்டணியில் இல்லை என்றும் யாரிடமும் அவர் கூறவில்லை. இவ்வாறு குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT