Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM

தேக்கம்பட்டி முகாமில் இருந்து - திரும்பி வந்தது ஆண்டாள் கோயில் யானை :

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு திரும்பி வந்த யானை ஜெயமால்யதாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

வில்லிபுத்தூர்

பாகன் இல்லாததால் யானையின் குணம் மாற வாய்ப்புள்ளதாகக் கூறி தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. இதில் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகன் வினில்குமார், அவரது உதவி பாகனும் அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி யானை பாகனை பணி நீக்கம் செய்தனர். பின்னர் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி யானைப்பாகன்கள் வனத் துறையினரால் கைது செய்யப்பட் டனர். அதைத் தொடர்ந்து, ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை திருச்செந்தூர் கோயில் உதவி பாகன் சுப்பிரமணியம் பராமரித்து வந்தார்.

இந்நிலையில், யானை ஜெயமால்யதாவை மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. அப்போது நீண்ட காலமாக யானையைப் பராமரித்து வந்த பாகன் இல்லாததால் அதன் குணங்கள் மாற வாய்ப்புள்ளது என்றும், இது முகாமில் உள்ள மற்ற யானைகளுக்கும், அலுவலர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல எனக் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்றக் காவலில் உள்ள பாகன் மீண்டும் முகா முக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை என்பதால் தற்காலிகப் பாகனைக் கொண்டு யானையைப் பரா மரிப்பது ஆபத்தானது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, யானை ஜெயமால்யதாவை முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திருப்பி அனுப்ப அறநிலையத் துறை உத்தரவிட்டது.

அதையடுத்து தேக்கம்பட்டி முகாமில் இருந்து , நேற்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்ட யானை ஜெயமால்யதா வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று பிற்பகல் வந்து சேர்ந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோயில் உதவி பாகன் சுப்பிரமணியம் யானை ஜெயமால்யதாவை தொடர்ந்து பரா மரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x