Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
ஆங்கிலேயர் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கப்பட்டன. இதன் மூலம் இவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை, இடஒதுக்கீடு கிடைத்தது. தற்போது தமிழகத்தில் டிஎன்சி என மாற்றப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுவதால் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத் திருத்தக் கோரி தொடர்ந்து போராடி வந்தனர்.
இது குறித்த வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றவில்லை என்று கூறி கம்பம், அம்மாபட்டி, கள்ளிப்பட்டி ஆகிய பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டியுள்ளனர்.
இது குறித்து சீர்மரபினர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், அதிமுக எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் கைவிட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுகவைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் அல்லது சுயேட்சைகளுக்கு எங்கள் வாக்குகளை அளிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT