Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி தாயம்மாள்(60). இவர் நேற்று வடுகபட்டி சாலையில் உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுத்துள் ளார். வங்கியில் இருந்து சிறிது தூரம் சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த 25 வயது நபர், தான் வங்கி ஊழியர் என்றும், அவரது கையெழுத்து தவறாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இைத நம்பிய தாயம்மாள் பாஸ் புக்கையும், அதிலிருந்த ரூ.12 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார். வங்கிக்குச் சென்று சரிபார்த்து வருகிறேன் என்று கூறிச் சென்ற இளைஞர் திரும்பி வரவில்லை.புகாரின்பேரில் பெரியகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT