Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் : ரூ.3.50 லட்சம் பறிமுதல் :

திருப்பத்தூர்

சட்டப்பேரவை தேர்தலைமுன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 சோதனைச்சாவடி களில் வாகன சோதனை பலப் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, புதுச்சேரியைச் சேர்ந்த செந்தமிழ்நம்பி (43) என்பவர் அவ் வழியாக காரில் வந்தார். அவரை நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ரூ.2 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

அந்த பணத்துக்கான ஆவ ணங்கள் அவரிடம் இல்லாததால் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனர். அதேபோல், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாணியம் பாடி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (50) என்பவர் அவ் வழியாக வந்தார்.

அவரிடம் நடத்திய சோதனை யில் ரூ.1.50 லட்சம் பணத்துக்கு ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x