Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
மும்பை: தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர் அனுராக் காஷ்யப். இந்தியில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அனுராக் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே, விகாஸ், மது மந்தேனா ஆகியோர் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு 'பான்டம் பிலிம்ஸ்' எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.
இந்நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்துவதில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள அவர்களது வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 20 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
அதேசமயம், தமிழில், ஆடுகளம், ஆரம்பம், உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை டாப்ஸி பன்னுவின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT