Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

பண்ருட்டியில் தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம் :

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணி ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரகாஷ், பன்னீர்செல்வம், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x